ரோடுகளை தரம் உயர்த்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
காரைக்குடி :நடப்பாண்டில் 4 மாநகராட்சி, 56 நகராட்சிகளில் மண் ரோடுகளை தார் ரோடாக தரம் உயர்த்த அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் சிமென்ட், தார், மெட்டல், மண் ரோடுகள் உள்ளன. நான்கு ரக ரோடுகளையும் தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு, வேலூர், சேலம்,திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களில் 56 நகராட்சிகளில் 60.133 கி.மீ.,மண் ரோடுகள் ரூ.8.20 கோடியில் தார் ரோடுகளாக தரம் உயர்த்தப்படும். மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் 13.150 கி.மீ.,மண்ரோடுகள் ரூ.1.80 கோடியில் தார் ரோடுகளாக தரம் உயர்த்தப்படும் என அரசு செயலர் (உள்ளாட்சிதுறை) தீனபந்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment