நெல்லை அருகே நடுரோட்டில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அதே பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர்கள் 2 பேரும் இன்று அங்குள்ள காமராஜ் நகரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவமும், முருகானந்தமும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment