Monday, August 20, 2007

Fifteen terrorists arrested in Manipur

clipped from www.dinamalar.com
அல்-குவைதா தீவிரவாதிகள் 15 பேர் மணிப்பூரில் கைது
மணிப்பூர் : மணிப்பூரில் இன்று 15 அல்-குவைதா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த இந்த 15 பேரையும் அசாம் போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் 15 பேரும் தீவிரவாத இயக்கமான அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் 10 பேர் மியான்மரில் இருந்தும், வங்கதேசத்தில் இருந்து 5 பேரும் வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
 blog it

No comments:

Post a Comment