அணுசக்தியின் தேவையை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு
புதுடில்லி : டில்லியில் ஓ.என்.ஜி.சி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- நாட்டின் எரிசக்தி தேவைகளை சரிசெய்ய அணுசக்தியின் தேவை அவசியம். பெருகி வரும் ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்ய புதிய யுக்தி ஒன்று தேவை. இதனை அணுசக்தி மற்றும், சூரிய சக்தி நிறைவு செய்யும். அணுசக்தி தேவையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்த அரசு இறங்கியுள்ளது. எனவே, அணுசக்தியின் தேவையை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment