கல்லூரி மாணவர்கள் போராட்டம
திருநெல்வேலி : நெல்லை ஸ்காட் சுயநிதி இன்ஜினியரிங் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரி செயல்படுகிறது. கடந்த 18ம் தேதி மாலையில் கல்லூரிக்கு சொந்தமான பஸ்களில் மாணவர்கள் நெல்லை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது இரண்டு பஸ்களும் போட்டி போட்டு வேகமாக சென்றதால் ஒரு பஸ் மேலச்செவல் அருகே ரோட்டோர மரத்தில் மோதியது. இதில் 20 மாணவ, மாணவிகள் காயமுற்றனர். பலத்த காயமுற்ற மாணவிகள் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி பஸ்சில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் காயமுற்றவர்களுக்கான மருத்துவ செலவை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கேட்டனர். நிர்வாகம் மறுத்ததால் மாணவர்கள் சேரன்மகாதேவி கல்லூரி வளாகத்தில் தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.,ஆனிமேரி ஸ்வர்ணா, டி.எஸ்.பி.,கிங்ஸ்லின் உள்ளிட்டவர்கள் வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment