Sunday, August 26, 2007

Onam celebrations are on the way

clipped from www.dinamalar.com
கேரளாவில் ஓணம் பண்டிகை ஏற்பாடு: பூக்கள் குவிகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை ( 27 ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இருந்து பூக்கள் மூடை, மூடையாக குவிந்து வருகிறது. வண்ணகோலம் . பூக்கோலம் போட்டு புத்தாடை அணிந்து கொண்டாடும் இந்த விமரிசையான விழாவிற்காக கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். கர்நாடாகாவில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
 blog it

Tuesday, August 21, 2007

five more arrested for Thenkasi murder

clipped from www.dinamalar.com
தென்காசி கொலை மேலும் 5 பேர் கைது
திருநெல்வேலி: தென்காசி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசியில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மேலகரம் அலெக்ஸ்(27), பாரதிநகர் ஆப்ரகாம்(26), வேலாயுதபுரம் பேரின்பராஜ்(24), மேலவாலிபன் பொத்தை கண்ணன்(23), மலையான் தெரு தங்கதுரை(19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 blog it

If India conducts atomic tests we will also conduct : Pakistan

clipped from www.dinamalar.com
  இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் நாங்களும் நடத்துவோம் : பாகிஸ்தான
இஸ்லாமாபாத் : இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் சோதனை நடத்தும் என கூறியுள்ளது. இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவும் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும் என கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் நடத்தும் என அந்நாடு கூறியுள்ளது. மேலும் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரிக்கும் எனவும், பிரச்னைகளை அதிகபடுத்தும் எனவும் கூறியுள்ளது.
 blog it

Sudden Raid in karnataka prison

clipped from www.dinamalar.com
கர்நாடகா சிறையில் அதிரடி ரெய்டு : கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்
ஹூப்ளி : கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளி தார்வாட் சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ஹூப்ளி தார்வாட் போலீஸ் கமிஷனர் நாராயணா நடுமணி உத்தரவின்பேரில் இந்த ரெய்டு நடந்தது. அப்போது சிறை கைதிகளிடம் இருந்து 15 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதி ஒருவர் குண்டுகளையும் மறைத்து வைத்திருந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 blog it

Bomb Threat in Mumbai College

clipped from www.dinamalar.com
மும்பை கல்லூரியில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு
மும்பை : மும்பை பார்லே பகுதியில் மீதிபாய் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு இன்று காலை ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதர் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து கல்லூரி முழுவதும் சோதனையிட்டனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு புரளியால் மும்பையில் பரபரப்பு நிலவி வருகிறது.
 blog it

Monday, August 20, 2007

The Practise Devadasi is Still continuing in India

clipped from www.bbc.co.uk
இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.

??????????
 blog it

Two people were murdered in public near Nellai

clipped from www.dinamalar.com
நெல்லை அருகே நடுரோட்டில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அதே பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர்கள் 2 பேரும் இன்று அங்குள்ள காமராஜ் நகரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவமும், முருகானந்தமும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 blog it