கர்நாடகா சிறையில் அதிரடி ரெய்டு : கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்
ஹூப்ளி : கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளி தார்வாட் சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ஹூப்ளி தார்வாட் போலீஸ் கமிஷனர் நாராயணா நடுமணி உத்தரவின்பேரில் இந்த ரெய்டு நடந்தது. அப்போது சிறை கைதிகளிடம் இருந்து 15 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதி ஒருவர் குண்டுகளையும் மறைத்து வைத்திருந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment