விமானத்தில் தீவிபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
டோக்கியோ : இன்ஜின் பழுதடைந்த விமானம் ஜப்பானில் தரையிறங்கியதும், அவசர வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறிய சில நிமிடத்தில் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது.
தைவானைச் சேர்ந்த சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 ஜெட் ரக விமானம், தைபேயில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்டது. விமானத்தின் இடது பக்க இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அவசர பாதை வழியாக தரையிறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜப்பானின் ஒகினாவா தீவின் தென் பகுதியில் உள்ள நாகா நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
No comments:
Post a Comment