மும்பை கல்லூரியில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு
மும்பை : மும்பை பார்லே பகுதியில் மீதிபாய் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு இன்று காலை ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதர் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து கல்லூரி முழுவதும் சோதனையிட்டனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு புரளியால் மும்பையில் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments:
Post a Comment